பாலியல் புகார் அளிக்க சென்னை வந்த பெண் எஸ்.பி.யை தடுத்த காவலர்கள் கூண்டோடு மாற்றம்

சென்னை: பாலியல் புகார் அளிக்க சென்னை வந்த பெண் எஸ்.பி.யை தடுக்க செங்கல்பட்டு எஸ்.பி.யுடன் வந்த காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆய்வாளர், காவலர்கள் 19 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ், திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு தாலுக்கா காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், காவலர் புண்ணியக்கோட்டியும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.காவலர்கள் அண்ணாமலை, பூபதி, போக்குவரத்து காவலர் மணிகண்டனும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெண் எஸ்.பி.யை தடுத்த ஆயுதப்படை காவலர்கள் 13 பேரையும் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியை கைது செய்யக்கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சிறப்பு டி.ஜி.பி.யை பதவி நீக்கம் செய்து, கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்….

The post பாலியல் புகார் அளிக்க சென்னை வந்த பெண் எஸ்.பி.யை தடுத்த காவலர்கள் கூண்டோடு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: