இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் பல படங்களில் இணைந்து பணியாற்றினார்கள். 14 வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். கங்களை அமரன் தனியாக படங்களுக்கு இசை அமைத்தார். படங்களை இயக்கினார். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதற்கு இருவரின் மகன்கள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.