9 வருடங்களுக்கு அமீ்ர் இயக்கும் படம் இறைவன் மிகப் பெரியவன். இயக்குனர் வெற்றிமாறன், மற்றும் திரைக்கதை ஆசிரியர் தங்கம் இருவரும் இணைந்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். படத்தின் அறிமுக விழாவில் அமீர் பேசியதாவது: ஒரு புதிய தயாரிப்பாளர், இந்த காலத்தில் படம் செய்வதே கடினம் அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். பாரதிராஜா சார் படம் செய்யும் போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார் ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் கொஞ்சம் சினிமாவில் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது.