பாரதியார் 141வது பிறந்தநாள் டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: பாரதியாரின் 141வது பிறந்த நாளையொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும், என்று எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழியைத் தந்த பாரதியாரின் பிறந்த நாள் இன்று. தன்னுடைய எழுச்சிமிக்க கவிதை வரிகளால் விடுதலை உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியவர். தேசபக்தி, தெய்வ பக்தி, தமிழ் மொழி மீது மாளாத பற்று என மகாகவி கொண்டிருந்த உயர்சிந்தனைகளை எந்நாளும் போற்றிக் கொண்டாடிடுவோம்….

The post பாரதியார் 141வது பிறந்தநாள் டிடிவி தினகரன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: