இந்தியாவில் பி20 மாநாடு

புதுடெல்லி: இந்தியாவில் ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற தலைவர்கள், சபாநாயகர்கள் கலந்து கொள்ளும் பி20 மாநாடு நடைபெறும் என்று  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூறுகையில், ‘‘இந்தியாவின் ஜி20 தலைமை பொறுப்பை மக்கள் பிரதிநிதிகள் கொண்டாட வேண்டும்.  ஜி20 மாநாடுடன் சேர்த்து பி20 மாநாடும் நடைபெறும். ஜி20 நாடுகளில் உள்ள நாடாளுமன்ற தலைவர்கள் மற்றும் சபாநாயகர்கள் பங்கேற்கும் பி20 கூட்டமும் நடைபெறும். ஜி20 மாநாட்டை நடத்துவது பெருமைக்குரியது, பி20யில் பங்கேற்பதற்காக வரும் பிரமுகர்களுக்காக நாட்டின் பன்முக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்”என்றார்….

The post இந்தியாவில் பி20 மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: