சிசோடியா நீதிமன்ற காவல் 30ம் தேதி வரை நீடிப்பு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்தாண்டு பிப். 26ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலின் அடிப்படையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மணீஷ் சிசோடியா நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவிஜா முன்னிலையில் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.

The post சிசோடியா நீதிமன்ற காவல் 30ம் தேதி வரை நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: