ஒன்றிய அமைச்சரின் தாய் மரணம்

புதுடெல்லி: ஜோதிராதித்ய சிந்தியா ஒன்றிய பாஜ அரசின் அமைச்சரவையில் விமான போக்குவரத்தத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா (70) நிமோனியாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மாதவி ராஜே சிந்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஒன்றிய அமைச்சர்கள், பாஜ தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post ஒன்றிய அமைச்சரின் தாய் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: