கடந்த சில வருடங்களுக்கு முன், குற்றப்பரம்பரை என்ற குறிப்பிட்ட சமூக மக்களின் வாழ்க்கைப் பதிவை சினிமா படமாக இயக்குவது தொடர்பான விவகாரத்தில் இயக்குனர்கள் பாலா, பாரதிராஜா இருவரும் கடுமையாக மோதினர். இதையடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி அறிக்கை வெளியிட்டு, சினிமா நிகழ்ச்சிகளிலும் வெளிப்படையாக தாக்கிப் பேசினர். இந்நிலையில் பாரதிராஜா, குற்றப்பரம்பரை படத்தை முதலில் நானே உருவாக்குவேன் என்று தொடக்க விழா நடத்தினார்.