தபுவை வெளியேற்றிய நந்திதா தாஸ்

நடிகைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் தபு, நந்திதா தாஸ். இருபெண்களுக்கு இடையேயான உறவாக வெளிவந்த லெஸ்பியின் கதை அம்சம் கொண்ட ஃபயர் இந்தி படத்தில் சப்னா ஆஷ்மியுடன் இணைந்து நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நந்திதாதாஸ். அழகி, விஸ்வ துளசி, நீர்பறவை, கன்னத்தில் முத்தமிட்டால் என தமிழில் தேர்வு செய்து சில படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் தபுவும் சிறைச்சாலை, சிநேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு படத்திலும் இவர்கள் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தென்னிந்திய படங்கள் பக்கம் தலைகாட்டாமல் பாலிவுட்டிலேயே முழுகவனம் செலுத்தி வந்த தபு, சமீபத்தில் தெலுங்கில் விராட பர்வம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கால்ஷீட் ஒதுக்கி கொடுத்து படப்பிடிப்புக்காக காத்திருந்தவருக்கு ஷூட்டிங் தள்ளிப்போகிறது என்ற தகவல் வந்தது. மற்ற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட் பாதிக்கப்படுவதாக கூறி படத்திலிருந்து வெளியேறினார்.

தபு வெளியேறிய பிறகு யார் இவ்வளவு கனமான வேடத்தை ஏற்று நடிப்பார்கள் என்று யோசித்த பட இயக்குனர், நடிகை நந்திதாதாஸை அணுகினார். அவருக்கு ஸ்கிரிப்ட், கதாபாத்திரம் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்புக்காக உடனே புறப்பட்டு ஐதராபாத் வந்த நந்திததாஸ், ‘இந்த படத்தை ஸ்கிரிப்ட் மற்றும் இயக்குனரின் விசாலமான நோக்கத்துக்காகவும் ஒப்புக் கொண்டேன். யாருக்கு பதிலாக நடிக்கிறேன் என்பதையெல்லாம் யோசிக்கவில்லை. கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம்’ என்றார்.

Related Stories: