இதை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த ஹாய் நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில், சன் ஆஃப் சர்தார் 2 படத்தில் நடித்துள்ள மிருணாள், சமீபத்தில் தனது 33வது பிறந்தநாளையும் கொண்டாடினார். பிறந்தநாள் கழித்து அடுத்த நாளில் அப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருடனே சுற்றி வந்த ஒரு இளைஞரை பார்த்து கூட்டத்தில் யார் இவர் என சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மிருணாளிடம் போட்டோகிராபர்கள் உங்களுடன் இருப்பவர் யார் என கேட்டுவிட்டனர். உடனே, ‘‘இவன் எனது தம்பி’’ என்று கூறி பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தினார் மிருணாள் தாக்கூர்.
