ஸ்ரீரெட்டின்னாலே தென்னிந்திய சினிமாவே சும்மா அதிருதில்லே. தெலுங்குத் திரையுலகத்தில் #MeToo சுனாமியைக் கிளப்பிவிட்டு, இப்போது சென்னையில் செட்டில் ஆகியிருக்கிறார்.அது மட்டுமின்றி இயக்குநர்கள் சுந்தர்.சி, முருகதாஸ் மற்றும் ராகவா லாரன்ஸ் ஏரியாவில் பாலியல் வெடிகுண்டுகளை வீசி தமிழ்த் திரையுலகையும் பரபரப்புக்கு உள்ளாக்கினார். அம்மணியின் அடுத்த குறி விஷால் போலிருக்கிறது. நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திடீரென விஷால் மீது பெண்கள் விவகாரத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார்.