ராணுவ நாய் ஜூம் மரணம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக்கில் கடந்த ஞாயிறன்று ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகப்பட்ட வீட்டிற்குள் இரண்டரை வயதான ராணுவ நாய் ஜூம் அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டிற்குள் மெதுவாக நுழைந்த ஜூம் மீது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் ஜூமை இரண்டு குண்டுகள் துளைத்தன. குண்டு பாய்ந்த பின்னரும் ஜூம் வீரர்களுடன் இணைந்து தீவிரவாதிகளை தாக்கியது. இதில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் வீரர்கள் இருவர் காயமடைந்தனர். படுகாயமடைந்த வ நாய் ஜூம் நேற்று வீர மரணம் அடைந்தது. …

The post ராணுவ நாய் ஜூம் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: