ஷ்ரத்தாவுக்கு கல்யாணமா? இயக்குனர்கள் ஷாக்

பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஷ்ரத்தா கபூர். இப்படம் மூலம் அறிமுகமாக உள்ள ஷ்ரத்தாவுக்கு கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. முதல்படம் வெளிவருவதற்கு முன்பே ஷ்ரத்தாபற்றி காதல் மற்றும் திருமண கிசுகிசு பரவி வருகிறது. ஷ்ரத்தாவுக்கும், பாலிவுட் போட்டோகிராபர் ரோஹன் ஷிரெஷ்தா என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக வும், காதலர்களாகவும் இருக்கின்றனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கின்றனர்.

அடுத்த வருடம் இவர்களது திருமணம் நடக்கும் என்று பேச்சு எழுந்துள்ளது. ஷ்ரத்தாவுக்கு 32 வயது ஆவதால் குடும்பத்தினரும் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்களாம். பாலிவுட்டிலிருந்து மற்றொரு அழகான, ஸ்லிம்மான ஹீரோயின் கோலிவுட்டிற்கு வருவதால் அவரை தங்களது படங்களுக்கு பயன்படுத்தலாம் என்று எண்ணியிருந்த இயக்குனர்கள் ஷர்த்தாவின் திருமண கிசுகிசுவை அறிந்து ஷாக் ஆகியிருக்கிறார்கள்.

முன்னதாக டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் ஷ்ரத்தா கபூர்.

அதற்காக சுமார் 1 வருடம் பேட்மின்டன் பயிற்சி பெற்று வந்த நிலையில் திடீரென்று அப்படத்திலிருந்து விலகினார். திருமண விவகாரத்தால்தான் ஷ்ரத்தா இப்படத்திலிருந்து விலகியிருக்கிறார் என்று ஒரு தரப்பு கூறினாலும், கடுமையான பயிற்சி பெற்றும் சாய்னா காட்டும் எனர்ஜி அளவுக்கு படத்தில் ஈடுசெய்து தன்னால் நடிக்க முடியாது என்பதால் விலகியதாக ஷ்ரத்தா தரப்பில் கூறப்படுகிறது.

காதல், திருமணம் பற்றி ஷ்ரத்தாவே நேரடியாக பதில் அளித்தால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஷ்ரத்தா கபூர் பாலிவுட் வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள். ஷ்ரத்தா திருமணம்பற்றி சக்தி கபூரிடம் கேட்டபோது,’எந்தவொரு தந்தையும் தன் மகள் நல்லதொரு குடும்பத்தை சேர்ந்தவரை மணந்து செட்டிலாக வேண்டும் என்று தான் எண்ணுவார். ஆனால் இந்த காலகட்டத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் சுதந்திரம் தரவேண்டும் என்று எண்ணுகிறேன்.

தங்களுக்கு பொருத்த மானவரை அவர்களே தேர்வு செய்து கொள்ள உரிமை உள்ளது. ெபற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேர்வு செய்யும் காலம் மலையேறிவிட்டது. எல்லா விஷயத்திலும் பிள்ளைகளின் கருத்தை கேட்டறிதல் வேண்டும், அது வாழ்க்கை துணை தேர்வாக இருந்தாலும் சரி. தனக்கு பிடித்தவரை  திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஷ்ரத்தா எப்போது கூறினாலும் அதற்கு உறுதுணையாக நான் இருப்பேன். இப்போதைக்கு அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்’ என்றார்.

Related Stories: