தீவிரவாதிகள் தாக்குதல் ராணுவ நாய் பரிதாப பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ நாய் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானது. ஜம்மு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வானிகம் பாலா என்ற இடத்தில் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அங்கு ராணுவம் விரைந்து சென்றது. அந்த பகுதியில் தீவிரவாதிகள் இருந்த இடத்தை கண்டுபிடிக்க பஜாஜ், அக்சல் என்ற 2 மோப்ப நாய்களை வீரர்கள் அனுப்பினர். அவை தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை துல்லியமாக கண்டுபிடித்தன. இதைத் தொடர்ந்து, ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், தீவிரவாதிகள் சுட்டதில் அக்சல் மீது குண்டு பாய்ந்தது இறந்தது. இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அக்சல் இறந்ததால் ராணுவ வீரர்கள் வேதனை அடைந்தனர். இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் அக்செல் மரணமடைந்தது. அக்செலின் வீரம், தியாகத்துக்கு தலை வணங்குகிறோம்,’ என்று குறிப்பிட்டுள்ளது….

The post தீவிரவாதிகள் தாக்குதல் ராணுவ நாய் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: