கார்த்திகை தீபமன்று மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வீட்டில் உள்ள இருளையும் தங்கள் உள்ளத்தில் உள்ள இருளையும் இறைவன் அருளால் நீங்கச்செய்வது வழக்கம். பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.
நல்லெண்ணை: தூய்மையான நல்லெண்ணை தீபம் இறைவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ஒழியும். அதோடு நவகிரகங்களையும் இதன் மூலம் திருப்தி படுத்தலாம்.