மூர்த்தி சிறிதாகினும்
கீர்த்தி பெரிதென்று செல்வம்
சேர்த்தி அருளும் ஐயப்பா!காடு போர்த்தி நடுவில்
மலையை குடைந்து அதில்வாசம் செய்யும்நீ மெய்யப்பா! ஆண்டுதோறும் உனை விரும்பிபக்தர் கூட்டம் பெருகுது -இருந்தும்பக்தி தான் கொஞ்சம் குறையுது!சந்தேகம் என்பது ஒருதுளி வந்தாலும்சபரிநாதன் அருள் கிட்டுமா -அவன்சந்நிதியில் மனம் ஒட்டுமா! பொருளுக்கு பொருளாகிமூலப்பொருளாக யோகத்தில்அமர்ந்தவன் யாரப்பா- நம்மஹரிஹர சுதன் புகழ் பாடுங்கப்பா! சத்தியம் காக்கவேநித்யசேவை செய்யும்உத்திர சித்தன் ஐயப்பன்!பத்திய உணவருந்திபத்திரம் செய்துவைத்தால்மனவியாதிக்கு மருந்தாகும் மூலிகைமாளிகைபுரத்து காரிகைமஞ்சளில் வடித்த தூரிகை அழுதாநதியில் கல்லெடுத்துகரிவலப்பாதை கடந்துபம்பா நதி அடையும் சுவாமிகள்பாவங்கள் தொலைய நீராடுங்கள்! சஞ்சலம் மனதில் நீங்கசத்தமாக சரணம் சொல்லுசங்கீத மனநிறைவு தங்கசபரியில் இருமுடியோடு நில்லு! ஐந்துமலை அரசன் கருணைபைந்தமிழ் சுவை அருணைகார்த்திகை தீபமாகி பின்காந்தமலை ஜோதியாகும் பெருமை! அருட்கூடமாகி சூடமாகிஅன்பு மூடமாகி தீபமாடமாகிஅறியா வேடமாகி ஆத்ம பாடமாகிஅருகினில் வருவான் ஐயப்பன்! இயற்கை பெருநிதி குணநிதிஇறங்கிவரும் அருள்நிதி -ஐயன்இசையாய் வாழும் குளிர்நதிஇன்றே சேர்வோம் அவன் சந்நிதி!
* விஷ்ணுதாசன்