மகாதாரித்ர்யமக்னஸ்ய மஹாபாப ஹதஸ்யச
மஹா சோக நிவிஷ்டஸ்ய மகாரோகாது
ரஸ்யச ருணபாரபரீதஸ்ய தஹ்டயமாநஸ்யகர்மபி:
க்ரஹை: ப்ரபீட்யமானஸ்ய ப்ரஸீத மம சங்கர.- பரமேஸ்வர ஸ்தோத்திரம்.பொதுப்பொருள்: கொடிய வறுமையில் தத்தளிப்பவனும், பெரும் பாவங்கள் செய்தவனும், பெருந்துன்பத்திற்கு உள்ளாகியிருப்பவனும், கொடிய பிணியால் துயரப்படுபவனும், பெருங்கடன் பட்டவனும், முன்வினையால் சுட்டெரிக்கப்படுபவனும், கோள்களால் துயரப்படுத்தப்படுபவனுமான, என்மேல் சங்கரா! கருணை கொள்வாயாக என்று அன்னாபிஷேக தினத்தன்று (11.11.2019) இத்துதியை பாராயணம் செய்தால் சிவபெருமான் திருவருளால் வறுமை நீங்கி, நவகிரக தோஷங்கள் தொலையும்.