கண்ணன் மனம் கனித்தோட்டம்
கன்னியர் காதல் வண்டாட்டம்
கன்னம் மின்னும் வைரமதில்பொன்னிதழ் முத்தம் -அந்த
கருத்தோவிய பிரகாசத்தில்நின்றொளிரும் தீபம் வெட்கும்ஐந்து குண தீபச்சுடரைநான்கணி குலமங்கையர் போற்றுவர்!கருத்தில் நிறைந்துகாரியம் புரிந்துகாலம் தானெனகாட்டும் கண்ணபிரான்!நீர்துளியில் பிறந்தோம்தீயில் கலந்தோம் எனும்தத்துவ உலக நெறியைதனஞ்செயனுக்குஉரைத்து உயிரில் கலந்த கண்ணபிரான்!ஆசை ஆடை கட்டிபாசப்பட்டு மிளிரஅன்பெனும் சங்குசக்கரம் சுழலட்டும்அக்கம்பக்கம் ஒளி பரவட்டும்!அச்சமெனும் மத்தாப்பை கொளுத்திபேராசை, அகங்காரம் விலக்கிபரந்தாமனை சரண்புகும் தீபாவளி!அசுர மனமேடை மீதாடும்அழுக்காறு கவர்ச்சி மங்கை-அதன்இருள்முகம் விலக்கும் தீபங்கள்இறைவனாம் உத்தமன்இதயம் தொடும் ராகங்கள்இல்லம்தோறும் பாடுங்கள்!எண்ணெய் எனும் விதியுள்ளவரைஉயிர்தீபம் எரியும்கண்ணன் பாதம்அடைக்கலம் புகுவோம்அன்பு மட்டுமே ஆயுள் கடந்து வாழும்!ஆசையிருக்கு மனதிலேஅழகு இனிப்பு கண்ணனைஅள்ளி அள்ளி உண்ணத்தான்ஓசையின்றி வெண்ணெய் திருடும் பிஞ்சு கையைமுத்தமிட்டு கொஞ்சத்தான்!தீபம் பேசும் தீபாவளிஇறை பேசும் இதயஒலிபெண்ணாய் இருந்தால்கோபிகையில் நானும் ஒருத்தியே!ஆணாய் பிறந்ததால் அந்த ஆழ்வார்களில் அடியேன் இளையவனே!விஷ்ணுதாசன்