நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சதுர்வேத வினாயகர்,மகாமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 22ம் தேதி தொடங்கி 23ம் தேதி அம்மனுக்கு காப்பு அணிவித்து கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறை வேற்றினர். மதியம் அபிஷேக ஆராதனையும்,கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும்,மாலை பூச்சொரிதலும் நடந்தது. இதனை தொடர்ந்து உபயதாரர்களின் மண்டகபடியும் நடைபெற்று வருகிறது.வரும் ஏப்ரல் 14ம் தேதி புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற உள்ளது .ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: