ஏஐ டெக்னாலஜி படிக்கும் கமல்ஹாசன்: 70 வயதிலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்

சென்னை: இந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், தமிழ்ப் படவுலகில் ஈடுபடாத துறையே இல்லை எனறு சொல்லலாம்.  உலகில் லேட்டஸ்ட்டாக அறிமுகமான தொழில்நுட்பங்கள் வரை தெரிந்துகொண்டு, அதில் தேவையானவற்றை தனது படங்களில் பயன்படுத்தி வரும் அவருக்கு 69 வயதாகிறது. கடந்த 60 வருடங்களாக திரையுலகில் வெற்றிகரமாக இயங்கி வரும் அவர், தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டிருக்கிறார். எப்போதுமே அவருக்கு முன்னேறி வரும் தொழில்நுட்பங்களின் மீது ஆர்வமும், உடனே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள உயர் கல்வி நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து படிப்பதற்காக கமல்ஹாசன் இணைந்துள்ளார். ஏஐ தொடர்பான 90 நாட்கள் படிப்புக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்ற அவர், அங்கு 45 நாட்கள் மட்டுமே படிக்கிறார். பிறகு தனது வழக்கமான திரைப்பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா திரும்புகிறார். தனது எதிர்காலப் படங்
களில் ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் முதல் டிஜிட்டல் படம், மென்பொருளை கணினி வழியாக படத்தில் பயன்படுத்தியது, முழு நீள மவுனப் படம், லைவ் ஆடியோ ரெக்கார்டிங், சிடி வடிவில் படங்களைப் பதிவு செய்வது, மல்டி கேரக்டர் எடிட்டிங், ஆஸ்கர் விருதுக்கு அதிகமாக பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்று கமல்ஹாசன் செய்துள்ள சாதனைகள் ஏராளம். முன்னதாக புதிய தொழில்நுட்பங்கள் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

எனக்கு புதிய தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த ஆர்வம் இருக்கிறது. எனது திரைப்படங்கள் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் பரிசோதனை செய்வதை அடிக்கடி பார்க்கலாம். சினிமாதான் என் வாழ்க்கை. என் சம்பாத்தியம் முழுவதும் பலவழிகளில் எனது படங்களுக்காக சென்றுவிட்டது. நான் நடிகன் மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளரும் கூட. திரைப்படங்களின் மூல மாக நான் சம்பாதித்த அனைத்தையும் தொழில்துறையில் மீண்டும் முதலீடு செய்து வருகிறேன்.

The post ஏஐ டெக்னாலஜி படிக்கும் கமல்ஹாசன்: 70 வயதிலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: