பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் ரத சப்தமியை முன்னிட்டு சுவாமி வீதி உலா நேற்று நடந்தது. பள்ளிகொண்டாவில் உள்ள உத்திர ரங்கநாதர் கோயிலில் நேற்று ரதசப்தமியை முன்னிட்டு காலை சூரிய பிரபை வாகனத்தில், பின்னர் அன்ன வாகனத்திலும், மதியம் அனுமந்த வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சென்று உற்சவ சுவாமி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.