எஸ்ஐ.யை கொன்றவன் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள துலிபால் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல், புல்வாமா மாவட்டத்தில் துஜ்ஜான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குனர் ஜெனரல் விஜயகுமார் கூறுகையில், ‘‘கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த மஜீத் நசிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவன் சில நாட்களுக்கு முன் உதவி ஆய்வாளர் பரூக் அகமது மிர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஆவான்,” என்றார். …

The post எஸ்ஐ.யை கொன்றவன் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: