களக்காடு: களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவ தலங்களில் 57வது தலமாக திகழ்கிறது. இந்த திருத்தலத்தில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் காட்சி அளிப்பது சிறப்பு மிக்கதாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை மிக்க இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்ப உற்சவ விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கோலாகலத்துடன் தொடங்கியது. இதையொட்டி அழகியநம்பிக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.