திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று பந்தல்கால் நிகழ்ச்சி நடந்தது. டிச. 18ல் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் டிசம்பர் 7ம் தேதி தொடங்குகிறது. 8ம் தேதி பகல்பத்து விழா தொடங்கி 17ம் தேதி மோகினி அலங் காரமும், 18ம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.