அமலாக்கத் துறை மேற்கண்ட வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிறைக்குள் இருந்து கொண்டே ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்து அவ்வப்போது சுகேஷ் கடிதங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு மின்னஞ்சல் மூலம் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பரபரப்பு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘ சிறையில் அமர்ந்து, வெளிப்படையாக என்னை மிரட்டும் சுகேஷூக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். அவர் எழுதும் கடிதங்கள், எனது தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
The post சிறைக்குள் இருந்து கொண்டு மிரட்டும் சுகேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.