‘பாய்’ மதங்களை புண்படுத்தாத படம் இயக்குனர் விளக்கம்

சென்னை: கே.ஆர்.எஸ் பிலிம்ஸ் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா இணைந்து தயாரித்துள்ள படம் ‘பாய்’. இதனை கமலநாதன் புவன் குமார் இயக்கி உள்ளார். தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆதவா ஈஸ்வரா நாயகனாக நடித்துள்ளார். நிகிஷா நாயகியாக நடித்துள்ளார். தீரத்கெர் வில்லன். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே.ரோஷன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்து விட்டு இது ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் படமாக இருக்குமோ என்ற சந்கேகத்தை கிளப்பி உள்ளனர்.

இது மதங்களை பற்றியல்ல, மனிநேயத்தை பேசும் படம். எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கமில்லை. பாய் என்றால் சகோதரன், நண்பன் என்று பொருள். அதன்படியே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி கேள்விகளை கேட்கும், இரண்டாம் பாதி அதற்கான பதில்களை சொல்லும் அப்படியொரு புதுமையான திரைக்கதையில் படம் உருவாகி உள்ளது. படம் வெளிவரும்போது சந்தேகங்கள் நீங்கும். இது அனைவருக்குமான படம் என்பதை உணர வைக்கும்’ என்றார்.

The post ‘பாய்’ மதங்களை புண்படுத்தாத படம் இயக்குனர் விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: