காவேரி ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தையின் சடலம்: போலீசார் விசாரணை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் காவேரி ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி கிடந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை குட்டை நீரில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று அழுகிய நிலையில் மிதந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் விரைந்து வந்து குழந்தையை வெளியில் எடுத்து வைத்துள்ளனர். மேலும் குழந்தையை பரிசோதிக்க தஞ்சையிலிருந்து மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது…

The post காவேரி ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தையின் சடலம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: