திருமண வதந்தியில் சிக்கிய ஸ்ரீ லீலா

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ரீலீலா, தற்போது மகேஷ் பாபுவுடன் இணைந்து ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தவிர, தெலுங்கில் பல புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது பாலகிருஷ்ணாவின் மகள் வேடத்தில் அவர் நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ என்ற படம், வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கில் பாலகிருஷ்ணாவின் மகன் மோஷக்னாவுடன் அவர் பேசிப் பழகியதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஸ்ரீலீலாவுக்கு விரைவில் திருமணம் நடப்பதற்கான ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெலுங்கு படவுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதையறிந்த ஸ்ரீலீலா தரப்பு இத்தகவலை உடனடியாக மறுத்துள்ளது. மேலும் அவரது தரப்பு கூறுகையில், ‘ஸ்ரீலீலா காதலிப்பதற்கும், திருமணம் செய்துகொள்வதற்கும் இப்போது நேரம் இல்லை. எனவே, இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். ஸ்ரீலீலா நடிப்பில் ‘பகவந்த் கேசரி’, ‘ஆதிகேசவா’ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. ‘குண்டூர் காரம்’, ‘உஸ்தாத் பகத்சிங்’, ‘எக்ஸ்ட்ரார்டினரி மேன்’ ஆகிய தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருமண வதந்தியில் சிக்கிய ஸ்ரீ லீலா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: