108 பேருக்கு மொட்டை போட்டு பிறந்தநாள் கொண்டாடிய எம்எல்ஏ

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியின் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவான பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆதரவாளர்கள் 108 பேருடன் வந்து முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டார். அதன்படி, சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ரங்கசாமி தலைமையில் ஆட்சியும் அமைந்தது.இந்நிலையில் பாஸ்கர் எம்எல்ஏ தனது பிறந்தநாளான நேற்று ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்கள் என மொத்தம் 108 பேருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு 108 பேரும், எம்எல்ஏ பாஸ்கரும் மொட்டை அடித்து கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினர். பிறகு, திருப்பதியிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடினார்….

The post 108 பேருக்கு மொட்டை போட்டு பிறந்தநாள் கொண்டாடிய எம்எல்ஏ appeared first on Dinakaran.

Related Stories: