ஊத்தங்கரை, ஆக.2: ஊத்தங்கரை அருகே, டூவீலரில் இருந்து தவிறி விழுந்து டிரைவர் பலியானார். ஊத்தங்கரை அருகே கல்லாவி பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(27). இவர், பெங்களூரு -புதுச்சேரி மார்க்கமாக செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு ஊத்தங்கரை வந்த பிரசாந்த், அங்கிருந்து டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கல்லூர் மயானம் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி டூவீலரில் இருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post விபத்தில் டிரைவர் பலி appeared first on Dinakaran.
