கஞ்சா விற்ற வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, ஆக.2: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எஸ்ஐ அமர்நாத் மற்றும் போலீசாருக்கு, கிரானைட் குவாரியில் பணியாற்றி வரும் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அச்சமங்கலம் காந்திநகரில் உள்ள தனியார் கிரானைட் குவாரியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது குவாரியில் பணியாற்றி வரும் பீகார் மாநிலம் வாரீஸ்நகர் ராம்பூர் நகரை சேர்ந்த ராஜேஷா (31) என்பவர், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: