சென்னை: விமான விபத்து பற்றிய செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்து பற்றி ஊடகங்கள் சரிபார்க்கப்படாத, யூகமான கருத்துகளை பரப்புவதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
The post விமான விபத்து செய்தியை வெளியிடுவது பற்றி ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.
