அரூர்:அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 140 விவசாயிகள் 750 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.7,519 முதல் ரூ.7,979 வரை, ரூ.24.60 லட்சத்திற்கு ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக ரூ.24.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.
The post ரூ.24.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.
