மஞ்சப்பை விழிப்புணர்வு

 

நிலக்கோட்டை, ஜூலை 21: சின்னாளபட்டி அருகே தொப்பம்பட்டியில் தமிழ்நாடு நீர்நிலை பாதுகாப்பு தன்னார்வ குழு சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் தமிழ் செல்வன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராமசாமி, பொறியாளர் சதீஷ், தன்னார்வலர்கள் பொன்ராஜ், முனியாண்டி முன்னிலை வகித்தனர்,

நாகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பாலித்தீன் பைகளை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள், மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. பாலமுருகன் நன்றி கூறினார்.

The post மஞ்சப்பை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: