மாமனாரை தாக்கிய மருமகன் போலீசார் வழக்கு பதிவு

சிவகாசி, ஜூலை 20: சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த செல்வம் மகன் அஜெய் (23). இவருக்கும் பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகள் சந்தனமாரிக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 5 மாதத்தில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மாடசாமி சம்பவத்தன்று வெம்பக்கோட்டை ரோட்டில் சைக்களில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த அஜெய், பால்பாண்டி ஆகியோர் வழி மறித்து அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாடசாமி, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாமனாரை தாக்கிய மருமகன் போலீசார் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: