இந்த சூழலில் தானமளிக்கும் இருவரும் கல்லீரல்களையும் மாற்று நோயாளிகளுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனுமதியை கிடைத்ததை அடுத்து, இரு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் இருவரின் மனைவிகள் கல்லீரல்கள் பெறப்பட்டு இணை மாற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 27 லட்சம் ரூபாய் செலவாகும் அறுவை சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடந்துள்ளது. அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான மருந்துகளும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
The post இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் புதுமை: 2 மருத்துவமனைகளுக்கு இடையே இணை மாற்ற அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.
