ஆசிரியர் இயக்கங்கள் மறியல்

 

விருதுநகர், ஜூலை 18: விருதுநகரில் சாலைமறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் 325 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நிர்வாகி செல்வ கணேசன் தலைமையில் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களை பாதிக்கும் பதவி உயர்வை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 121 பெண்கள் உட்பட 325 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

The post ஆசிரியர் இயக்கங்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: