மயங்கி விழுந்து லோடுமேன் சாவு

 

பண்ருட்டி, ஜூலை 18: பண்ருட்டியை அடுத்துள்ள எஸ்.ஏரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர்(55). இவர் லாரியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை உளுந்தூர்பேட்டையில் லோடு இறக்கிவிட்டு லாரியில் வீரப்பெருமாநல்லூர் பிரிவு சாலையில் வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மயங்கி விழுந்து லோடுமேன் சாவு appeared first on Dinakaran.

Related Stories: