எனவே இவ்வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம். மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பு முறைகேடு வழக்கை தமிழ்நாடு காவல்துறையே நேர்மையாக விசாரணை நடத்தும். அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை, ஏற்கனவே சிபிஐயிடம் அதிக வழக்குகள் உள்ளன. தென்மண்டல ஐ.ஜி, மதுரை ஆணையர் இணைந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டும். சிறப்பு விசாரணைக்குழு அதன் அறிக்கையை அவ்வப்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் அதனை கண்காணிக்கும். அத்துடன் வழக்கு தொடர்பாக அரசு தரப்பில், ஜூலை 25ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”இவ்வாறு தெரிவித்தனர்.
The post முறைகேடு வழக்கை தமிழ்நாடு காவல்துறையே நேர்மையாக விசாரணை நடத்தும்… : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.
