உதவித் தொகையை உயர்த்த கோரிக்கை

 

மதுரை, ஜூலை 17: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வில், வெற்றி பெறும் மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

ஒன்றிய அரசு ஆண்டு தோறும் 8ம் வகுப்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு, 12ம் வகுப்பு வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையை ரூ.1500 ஆகவும், ஒரு லட்சம் மாணவர்கள் என்ற எண்ணிக்கையை பத்து லட்சமாகவும் உயர்த்த வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post உதவித் தொகையை உயர்த்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: