மதுரை, ஜூலை 16: சிலைமான் அருகே கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் அரசு(18). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அழகுபாண்டி அவரது பள்ளி நண்பர் அரசுவை போலீஸ் பேசுவது போல பிராங்க் செய்துள்ளார். சில நாட்கள் கழித்து, இது பிராங்க் என அரசு குடும்பனத்தினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் அழகுபாண்டியின் அண்ணன் செல்லபாண்டியை அரசு முறைத்து பார்த்துள்ளார்.
இதனால் தனது தம்பி அழகுபாண்டியை அரசு தாக்கி விடுவாரோ என செல்லப்பாண்டி நினைத்து அரசுவை ஜூலை 11ல் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக சிலைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசுவின் தந்தை பாண்டியராஜன்(50), மகன் கொலையான கவலையில் இருந்து வந்துள்ளார்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் கல்மேடு பகுதியில் உள்ள காலி இடத்தில் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மகன் இறந்த சோகத்தில் மயங்கி விழுந்த தந்தை சாவு appeared first on Dinakaran.
