இந்த விமானம் 6 மணி நேரம் தாமதம் குறித்து, அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தான், அதிகாலை 5 மணிக்கு மீண்டும், சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.
ஆனால் இன்று (நேற்று) அந்த விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.25 மணிக்கு தான், தமாமிலிருந்து சென்னைக்கு வந்தது. எனவே சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானமும், தாமதமாக புறப்பட்டு சென்றது என்று கூறுகின்றனர். சென்னை- டெல்லி, டெல்லி- சென்னை 2 ஏர் இந்தியா பயணிகள் விமானம், நிர்வாக காரணங்களால் நேற்று ரத்து செய்யப்பட்டன. பயணிகளுக்கு அதுகுறித்து தகவல் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து, மற்றொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
The post சென்னை -டெல்லி, டெல்லி -சென்னை 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் திடீர் ரத்து appeared first on Dinakaran.
