தற்போது கவியருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் ஒற்றை யானை உலா வருகிறது. நேற்று, நவமலை ரோட்டில் வால்பாறை மலைப்பாதை வரை உலா வந்த ஒற்றை காட்டு யானை அங்கு உணவு தேடியது. தொடர்ந்து கவியருவி செல்லும் சாலையில் சாவகாசமாக நின்று சென்றது. நவமலைரோடு வழியாக வால்பாறை மலைப்பாதையில் அடிக்கடி ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால், சுற்றுலாதளங்களில் யானை வருவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post பொள்ளாச்சி அருகே மக்களை மிரட்டும் ஒற்றை யானை appeared first on Dinakaran.
