இதை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி திட்டமிட்ட நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தது. திட்டமிட்ட நேரமான நள்ளிரவு 12.45க்கு கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
எஞ்சின் பழுதால் சுமார் 5 மணி நேர காத்திருப்புக்கு பிறகு பயணிகள் அதிகாலை 5.20 மணி அளவில் பத்திரமாக விமானத்தில் இருந்து இறங்குமாறு விமானி அறிவுறுத்தினார். விமானிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டதை அடுத்து நிபுணர்கள் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சான் பிரான்சிஸ்கோ – மும்பை விமானத்தில் எஞ்சின் பழுது: பயணிகளை பத்திரமாக தரையிறங்கிய விமானி appeared first on Dinakaran.
