வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு

 

வேதாரண்யம், ஜூன் 14: வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள சமையல் உதவியாளர்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள 35 சமையல் உதவியாளர்கள் இடங்களுக்கு வரப்பட்ட விண்ணப்பங்களில் முதற்கட்டமாக 24 பணியிடங்களுக்கு தகுதி உடைய 88 பேர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்முக தேர்வுகள் நடைபெற்றது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து வரப்பட்ட மனுக்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு திட்டம்) அசோக்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, ஒன்றிய சத்துணவு திட்ட மேலாளர் ஆசைத்தம்பி, வருவாய்த்துறை அலுவலகத்தைச் சேர்ந்த வேங்கடசிவம் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள 7 சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றது என ஒன்றிய ஆணையர்கள் ராஜூ, சிங் காரவேலு ஆகியோர் தெரிவித்தனர்.

The post வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: