கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்

 

கறம்பக்குடி, ஜூன் 13: கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து மலையூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவார் கிராமத்தில் கருப்பட்டி பட்டிசாலையில் ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இந்த ஆற்றுப் பாலம் கீழ்ப்பகுதியில் கழுத்தில் மூக்கில் காயத்துடன் சுவாதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

அந்த வழியாக சென்றோர் உடலைப் பார்த்து மலையூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு மலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் appeared first on Dinakaran.

Related Stories: