தர்மபுரி, மே 28: தர்மபுரி ஏ.கொல்லஅள்ளி ரோடு சாய்பாபா கோயில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). இவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். தர்மபுரி அடுத்த மதிகோண்பாளையத்தை சேர்ந்தவர் சிவபிரகாசம் மகன் முகேஷ்(27). கடந்த 11ம்தேதி பிரவீன் குமாரிடம் காரை வாடகையை எடுத்துச்சென்றார். ஆனால், காரை திருப்பி ஒப்படைக்கவில்லை.
காரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசில் பிரவீன்குமார் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து முகேஷ், மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நாகர்கூடல் முனுசாமி மகன் முனியப்பன்(25), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது (71), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை
தேடி வருகின்றனர்.
The post வாடகைக்கு எடுத்து சென்ற காரை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.
