திங்கள்சந்தையில் கடையில் புகையிலை பொருள் விற்றவர் கைது

 

திங்கள்சந்தை, மே 28: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் திங்கள்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடையில் இருந்த சிவகுமார் (47) என்பவரை கைது செய்த போலீசார், புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திங்கள்சந்தையில் கடையில் புகையிலை பொருள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: