காரைக்குடி மாநகராட்சியில் 50க்கும் மேற்பட்ட கொடிகம்பம் அகற்றம்

காரைக்குடி, மே 16: காரைக்குடி மாநகராட்சி பகுதியில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை மாநகராட்சி மற்றும் போலீசார் அகற்றினர். சாலையோரங்களில் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து காரைக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கொடிகம்பங்களை அவர்களாவே அகற்றி கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் அரசியல் கட்சியினருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அகற்றப்படாமல் இருந்த கொடி கம்பங்களை அகற்ற மாநகராட்சி சார்பில் நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் டிஎஸ்பி பார்த்தீபன், நகரமைப்பு அலுவலர் பாலாஜி, டிபிஐ தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கொடி கம்பங்களை நேற்று காலை முதல் மாலை வரை அகற்றினர். இதில் 36 வார்டுகளிலும் சாலையோரங்களில் இருந்த அரசியல் கட்சிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்ட கொடி கம்பங்களை அதிரடியாக அகற்றினர். கொடிகம்பங்களை அகற்றும் போது பிரச்னைகளை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு

The post காரைக்குடி மாநகராட்சியில் 50க்கும் மேற்பட்ட கொடிகம்பம் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: