தேனி, மே 14: தேனி மாவட்டத்தில் பகலில் சாரல் மழை பெய்தது.தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. நேற்று காலை முதல் தேனி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதேசமயம் வெப்ப புழுக்கமும் நிரம்பி இருந்தது.
மழை பெய்யாத நிலையில் புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் சிறிய பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் கனமழை பெய்யும் என தேனி பகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் நேற்று மதியம் 2 மணி அளவில் மாவட்டத்தில் சில இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்து நின்றது. இதன் காரணமாக வெப்ப புழுக்க நிலை மாறி குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post மாவட்டத்தில் சாரல் மழை appeared first on Dinakaran.
